புதன், 11 மார்ச், 2009

மாத்தறையில் இடம்பெற்ற தேசிய மீலாதுன் நபி அங்குரார்ப்பண வைபவத்தில் தற்கொலைத் தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம்.

மாத்தறையில் இடம்பெற்ற தேசிய மீலாதுன் நபி அங்குரார்ப்பண வைபவத்தில் தற்கொலைத் தாக்குதல்மத வழிபாட்டில் கலந்து கொள்ளச் சென்றவர்கள் மீது புலிகள் நடத்திய மனிதாபிமானத்திற்கு அப்பாற்பட்ட இந்தச் செயலை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். தற்கொலைத் தாக்குதல் மூலம் இப்படியான செயல்பாட்டை இலங்கையில் புலிகளைத்தவிர இதுவரை வேறு எவரும் செய்தது கிடையாது. எனவே இது புலிகளால் செய்யப்பட்டது என்பது வெளிப்படையாகும். சிலர் வாதிடுவதுபோல் அரசாங்கம் செய்து விட்டு புலிகள் மேல் குற்றம் சுமத்தலாம் என்ற வாதத்திற்கே இங்கு இடமில்லை. புலிகள் அநாகரிகமான செயற்பாட்டை நிறுத்த வேண்டும்.
இதே வேளை புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள மக்கள் தொடர்ந்து கொல்லப்பட்டுக்கொண்டும் காயப்படுத்தப் பட்டுக்கொண்டும் இருக்கின்றார்கள். அரசாங்கம் அதை மறுத்துக்கொண்டிருக்கிறது. அந்தச் செயற்பாட்டை நாம் வன்மையாக கண்டிப்பதோடு பொதுமக்கள் பாதிக்கப்படுவதில் தேவையான கவனம் செலுத்தப்படவேண்டும் என்பதையும் கூறிக்கொள்கின்றோம். புலிகள் மக்களோடு நிற்கின்றார்கள், அங்கு நின்று தர்க்குகின்றார்கள் அதனால்தான் அரசாங்கம் அப்படிச் செய்கின்றது என்ற சிலரின் வாதத்தை எவராலும் ஏற்றுக்கொள்ளவும் முடியாது அது மனிதாபிமானம் கொண்ட செயலும் அல்ல. அரசு உடனடியாக இந்தக்காட்டுமிராண்டித் தனத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக