சனி, 11 ஜூலை, 2009

வன்முறையின்றி தேர்தல் ஏதுக்கடி குதம்பாய்!

- சதாசிவம். ஜீ.
‘ஆடு நனையுதென்று ஓணான் அழுதுதாம்’ என்ற கதையாக வவுனியாவில் தடுப்பு முகாமில் தங்கியிருக்கும் மக்களைப் பார்த்து பொறுக்க முடியாமல் பலரும் பலவிதமாக கண்ணீர் வடிக்கின்றனர். இதில் யாழ். பாராளுமன்ற உறுப்பினர் பத்மினி சிதம்பரநாதன் வடித்த கண்ணீரை நாம் ஓணான் அழுததோடு ஒப்பிடமுடியாவிட்டாலும், ஓணான்களுடன் அவருக்கு நல்ல உறவிருக்கிறது. அந்த உறவால்தான் அவருக்கு பாராளுமன்ற கதிரை கிடைத்தது என்பதை யாழ் மக்கள் நன்கு அறிவர். அதுவும் இறுதியாக நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் இரண்டாவது அதிகப்படியான வாக்குகளைப் பெற்றவர்! முதலாவது அதிகப்படியான வாக்குகளைப் பெற்றவர் குதிரை கஜேந்திரன்! இவர்களுக்கும் சனங்களுக்கும் என்ன சம்பந்தம்? என்பது தெரியாவிட்டாலும், இவர்களிருவருக்கும் என்ன சம்பந்தம் என்பதை யாழ். மக்கள் நன்றாகவே அறிந்துவைத்திருக்கின்றனர். பாவம் சிதம்பரநாதன் ‘அப்ப (90களில் யாழ்ப்பாணத்தை புலிகள், தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த காலகட்டத்தில் மின்சாரம் இல்லை. மற்றும் அத்தியாவசிப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவியது) புலிகளுக்காக விளக்குப் பிடித்து நாடகம் போட்ட பாவமோ என்னவோ!’வவுனியாவிலுள்ள இடைத்தங்கல் முகாமிலுள்ள மக்களின் துன்பங்களையும் துயரங்களையும் வேதனைகளையும் சொற்களில் வடித்துவிடக்கூடியதல்ல. காலைக் கடனை செலுத்துவதற்கு(கழிப்பதற்கு) நீண்ட வரிசையில் மக்கள் நிற்கிறார்கள். அதனாலேயே வயிற்று வலி மற்றும் வியாதிகள் அவர்களைத் தொற்றிக்கொள்கிறது. இவர்களின் நிலைமைகள் தொடர்பாக பலரும் தமது பார்வையை முன்வைத்திருக்கிறார்கள்.அடைமழை. சாவீடு. காவோலை கொண்டோடுறவனை வழிமறித்து ஐயர் குருதட்சனை கேட்ட கொடுமைகள் அங்கே நடந்தவண்ணமே இருக்கின்றன. அந்த மக்களுக்கென வழங்கப்படுபவை சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகளுக்கும் சுவறிச் செல்லம் துர்பாக்கியம். சத்தம் சந்தடியில்லாமல் சில நல்லவையும் நடந்துவருகின்றன. புலன் பெயர்ந்துள்ள புலமையுள்ளவர்கள் சிலர் நாடு திரும்பி, தடுப்பு முகாம்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிவருகிறார்கள். இதில் குறிப்பிட்டக்கூடியது காயப்பட்டவர்களுக்கு, நோய்வாய்ப்பட்டவர்களுக்கு இவர்கள் சிகிச்சையளித்து வருகின்றனர்.
மாநகரசபைத் தேர்தல்.
தேர்தல் இன்றி வன்முறை நடைபெறும். ஆனால் வன்முறையின்றி தேர்தல் நடைபெறுமா? இல்லை. தேர்தல் என்றால் வன்முறையும் சேர்ந்ததுதான் என்பது உலகளாவிய ரீதியில் நிரூபிக்கப்பட்டுவருகிறது. இது இலங்கைக்கோ இந்தியாவுக்கோ மட்டும் பொருத்தமானதல்ல.யாழ்ப்பாணத்தில், வவுனியாவில் மங்களகரமாக தேர்தல் வன்முறைகள் ஆரம்பித்துள்ளன. வன்முறையால் அடாவடித்தனங்களால் எதையும் சாதிக்கலாம் என்றிருந்தவர் முள்ளிவாய்க்காலில் தலை கிள்ளி எறியப்பட்ட பாடத்தை இன்றும் கற்றுக்கொள்ள மறுப்பது அறிவீனம். வன்முறைக்குப் பழக்கப்பட்டவர்கள் அதிலிருந்து விடுவித்துக்கொண்டு ஜனநாயக ரீதியில் மக்களை அணுகுவதுதான் அவர்களுக்கும் நல்லது. மக்களுக்கும் நல்லது.ஊரில் சில்லறைத்தனமான திருட்டுக்கள் நடைபெற்றால் ‘இன்னார்தான் எடுத்தது’ என்பதை சனங்கள் நன்கு அறிவர். இவ்வளவு காலமும் புலிகளின் தலையில் பச்சடி அரைக்கலாம் என்று பலதரப்பட்டவர்களும் தடியைக் கையிலெடுத்து தண்டல்காரன் ஆனார்கள். இப்போ புலிகளின் கொட்டம் (i) இல்லை. எனவே சனங்களுக்கு விடையைக் கண்டுபிடிப்பது அவ்வளவு கஸ்டமனதல்ல என்பதை சம்பந்தப்பட்டவர்கள் புரிந்துகொள்வது நல்லது. யூ.என்.பியின் ஆட்சிக்காலத்தில் யாழ். நூலகம் எரிக்கப்பட்டது. அதளை மீள்நிர்மாணம் செய்வதற்கு சகலவழிகளிலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா தலைமையிலான அரசாங்கம் ‘வீட்டுக்கொரு செங்கல்’ என்ற திட்டத்தில் செங்கற்களை கிராமம் கிராமமாக சேகரித்து யாழ்ப்பாணத்துக்கு அனுப்பிவைத்தது. தென்பகுதி மக்களின் பங்களிப்பு அதில் உள்ளடக்கப்பட வேண்டும் என்பதே நோக்கம்.முன்னாள் மேயர் செல்லன் கந்தையாவின் தலைமையில் நூலகம் திறக்கப்பட சகல நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் நூலகம் திறக்கப்படவில்லை. யாழ் மாநகரசபை உறுப்பினர்கள் அனைவரும் திறக்கும் முயற்சியில் தீவிரம் காட்டியபோது, செல்லன் கந்தையா மற்றும் தங்க. முகுந்தனை மூடிய அறைக்குள் அழைத்த அன்றைய புலிகளின் யாழ். மாவட்டப்பொறுப்பாளர் இளம்பருதி (பாப்பா, ஆஞ்சநேயர்) யாழ்ப்பாணத்தில் ‘ரத்த ஆறு ஓடும்’ என்று எச்சரித்து திறக்கவிடாமல் செய்தார். (இன்று இளம்பருதி இராணுவத்தின் கவனப்பில் நலமாகவேயுள்ளார்!)இந்த செய்தியினை அன்றைய யாழ். பத்திரிகைகள் உட்பட அனைத்து தமிழ் பத்திரிகைகளும் இருட்டடிப்பு செய்தன. தமிழ் பத்திரிகைகள் புலிகளுக்கு பயந்துதான் அவ்வாறு நடந்துகொண்டன என்பதெல்லாம் சுத்த பம்மாத்து. ஏனெனில் புலிகளின் விருப்பு எது? என அறிந்து அதன்படி நடந்துகொள்வதை பயந்துதான் என்று சொல்லுவது அறியாமை. செல்லன் கந்தையாவின் தலைமையில் அது திறக்கப்படக்கூடாது என்பதில் யாழ் சைவ வேளாளர் குடி மட்டும்தான் மிகுந்த கவனம் செலுத்தியது என்றில்லை. மேற்படி பத்திரிகைகளும்தான்.கடந்த கால்நூற்றாண்டுக்கு மேலாக ஏறக்குறைய நாற்பதாயிரம் உயிர்களை பலிகொடுத்தும் புலிகளால் குறைந்தபட்சம் ஒரு நூகத்தைகூட திறக்க முடியவில்லை. பேரூந்து நிழல் குடையினைக்கூட திறக்க முடியாத வக்கற்றிருந்தார்கள். புலி உறுப்பினர்களின் பெயர்களில் இருக்கும் நிழல் குடைகள் புலி உறுப்பினர்களின் உறவுகளால் நிர்மாணிக்கப்பட்டது. புலிகளுடனான இறுதி சமாதானக் காலத்தில்தான் மேற்படி அடாவடித்தனங்கள் அரங்கேறின. நூலகம் திறப்பதில் முன்னின்று உழைத்த யாழ். மாநகர உறுப்பினர் தோழர் சுபத்திரன் (றோபேட்) இதே சமாதான காலத்தில் சுட்டுக்கொல்லப்பட்டார். மேலும் பலரும் சுட்டுக்கொல்லப்பட்டனர். புலிகளுக்கு நல்லவையும் பிடிக்காது, நல்லவர்களையும் பிடிக்காது. இவர்கள் மக்களுக்கு நல்லவை நடக்காதபடி பார்த்துக்கொண்டார்கள். நல்லவர்களை உயிரோடு விட்டுவிடாமலும் பார்த்துக்கொண்டார்கள்.இந்த மனிகுலத்துக்குப் புறம்பான கேவலம்கெட்ட நடைமுறைகள் புலிகளுடன் விட்டொழியட்டும். மனிதகுல வரலாற்றில் நாமும் மூத்தகுடி என்று மார்பு தட்டுவதற்கான தகுதிகளை இனியாவது நாம் வளர்த்துக்கொள்வோம். மக்களை ஜனநாயக ரீதியில் சிந்திக்கவும் செயற்படவும் அதிகாரத்தை கையிலெடுத்தவர்கள் அனுமதிப்பது மட்டுமல்ல தூண்டவும் வேண்டும். உண்மையில் அதிகாரம் என்பது மக்களுக்கு சேவை செய்யவும் அவர்களை அறிவியல், கலாசார ரீதியில் முன்னேற்றவும், அவர்களை பாதுகாக்கவும்தான். அவர்களை அடக்கி ஆழ்வதற்காக அல்ல. அதிகாரத்தைப் பயன்படுத்தி தமது சுகபோகத்தை மேம்படுத்துவதோ அல்லது கட்சியை - இயக்கத்தை வளப்படுத்துவதற்காகவோ அல்ல.

ஸ்ரீகாந்தா சொல்வதை நம்பலாமா?

அண்மையில் ஸ்ரீகாந்தா பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது மக்களுக்காக இலங்கை அரசாங்கத்துடன்சேர்ந்து ஒரு இணக்கப்பாட்டுடன் வேலை செய்யவேண்டும் என்றும். அதுதான் இப்போது செய்யக்கூடிய ஒரே வளியென்றும் கூறியிருந்தார். இது தன் பதவியை தக்கவைத்துக் கொள்வதற்காக சொல்லப்பட்டுள்ளதா அல்லது உண்மையிலேயே மக்களுக்காக சில தந்திரோபாயங்களை பாவித்து மக்களை மீளக் குடியேற்றலில் உதவப்போகின்றாரா? இவர் கூறியதை நம்பலாமா?