வியாழன், 26 பிப்ரவரி, 2009

உதயன் சுடரொலி பிரதம ஆசிரியர் வித்தியாதரன் கடத்தப்பட்டுள்ளார்:

இலங்கையில் அரச வன்முறைக்குப் பலியாகும் பத்திரிகையாளர்கள்இ கடத்தல்இ மிரட்டல் கொலை என்று இல்லாமலாக்கபப்டுகின்றனர். இதன் தொடர்ச்சியாக இன்னொரு பத்திரிகையாளர் கடத்தப்பட்டார்.சுடர் ஒளி பிரதம ஆசிரியர் என்.வித்தியாதரன் வெள்ளை வேனில் வந்த இனந்தெரியாத ஆயுததாரிகளால் இன்று காலை கடத்தப்பட்டுள்ளதாக அப்பத்திரிகையின் நிர்வாகப் பணிப்பாளர் தெரிவித்தார். இக்கடத்தல் சம்பவம்குறித்து கல்கிஸ்ஸை பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இன்று காலை கல்கிஸ்ஸை மஹிந்த மலர்ச்சாலையில் இடம்பெற்ற இறுதிக்கிரியை ஒன்றில் கலந்துகொண்ட நபர் ஒருவர் கடத்தப்பட்டுள்ளதாக 119 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு இன்று காலை 9.15 மணியளவில் முறைப்பாடு கிடைக்கபெற்றதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக