வியாழன், 26 பிப்ரவரி, 2009

வன்னியின் இந்த வாழ்வு யாரால்?


வன்னியில் அறிவிக்கப்பட்ட பாதுகாப்பு வலயத்தில் பொது மக்களின் நிஜ வாழ்வு இப்படங்களில் இருந்து அறிய முடிகின்றது. மரங்கள் அற்ற கடற்கரை வெளி, பங்குனி உச்ச வெயிலை நோக்கிய மாசி மாதம். தண்ணீர் வளமற்ற பிரதேசம். சீலை விரிப்புக்களால் ஆன வீடுகள். வெளிநாடுகளில் ஏசி அல்லது சூடேற்றப்பட்ட வீடு மீன்வாங்க செல்ல கூட பயன்படும் கார். திறந்தால் குடிக்க குளிக்க தண்ணீர். கூடவே வார இறுதி நாட்களில் களியாட்டங்கள். உயிர் போனால் லம்சமாக பெற காப்புறுதிகள் இன்னும் பல… இப்படி இருந்து கொண்டு போர் முரசு கொட்டலாம் தானே. கொல்லப்படுவது என் பிள்ளை இல்லைதானே. வாழ வழி இல்லாத ஏதிலிகள்தான். தலைவர்கள், அரசியல் ஆய்வாளர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரின் பிள்ளைகள், குடும்பங்கள் பாதுகாப்பாக வெளிநாடுகளில். நன்றாக போர் முரசு கொட்டுங்கள் 3 நாட்களில் 1000 இராணுவம் சாகலாம் 3000 காயப்படலாம். என்ன என் பிள்ளையா? உன்பிள்ளையா? ஊரார் வீட்டுப்பிள்ளைகள் தானே!
நன்றி www.sooddram.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக